தமிழ் கவிதைகள்
Saturday, 28 February 2015
கவிதை
காலையில் சந்திரன்
மாலையில் சூரியன்
அவள் நினைவில்
வாழ்க்கை மாறியது
மாது பிரிந்தாள்
மதி தெழிந்தது...........
Wednesday, 25 February 2015
அம்மா
மாலை மலர
பூக்கள் அரும்ப
பதமாய் தென்றல்
இதமாய் சாரல்
மறையும் சூரியன்
காப்பியுடன் அம்மாவின்
பாசப் பிணைப்பில்.........!
Tuesday, 24 February 2015
கவிதை
காலை தென்றல்
மாலை மலர்
இரவு சந்திரன்
கனவு உன்னொடு
கலைவது எப்போது........!
Monday, 23 February 2015
காதல்
விழி கண்டு
வழி மறந்தாய்
பூ என்று
பூமி மறந்தாய்
நிலா கண்டு
நிலை மறந்தாய்
மான் என்று
மதி மறந்தாய்
விதி கண்டு
உனை மறந்தாள்
Sunday, 22 February 2015
ஒற்றுமை
சாதி மதத்தை மறந்து
ஒரே குலம் என்றிரு
இந்தியன் என்று ஒன்றுபட்டு
உலகம் நெகிழ நடந்திடு
"ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
இல்லையேல் அனைவரும் தாழ்வு"
என்ற பாரதியின் கனவை நனவாக்கு.
Newer Posts
Home
Subscribe to:
Comments (Atom)