Wednesday, 2 September 2015

பாென்மாெழி

 
நாம் படைப்பின் ஒரு துளியாக இருக்கமுடியும், அல்லது படைப்பின் மூலமாக இருக்கமுடியும். தேர்வு நமது கையில்தான் உள்ளது

Tuesday, 25 August 2015

பொன்மொழி


புத்திசாலித்தனம், நுன்னுணர்ச்சி, மற்றும் புரிதல் ஆகியவை வாழ்க்கையின் மிக முக்கியமான அம்சங்களாக மாறினால் மட்டுமே ஆணும் பெண்ணும் சரிசமமாக நடத்தப் படுவார்கள்.

Sunday, 23 August 2015

பொன்மொழி

அர்த்தம் தேடுவது மனதின் குணம், வாழ்க்கைக்கு அப்படியொரு தேவை இல்லை. நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள், அதுவே அழகானது, போதுமானது.

Saturday, 15 August 2015

பொன்மொழி

நம் அனைவருக்கும் ஒரே வேகத்தில் நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது. நேரத்தை உங்களால் நிர்வகிக்க முடியாது, உங்கள் சக்தியை உங்களால் நிர்வகிக்க முடியும்.

Tuesday, 11 August 2015

பொன்மொழி


ஆனந்தமாய் இருக்கவே எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனால், மனிதர்கள் மீண்டும் மீண்டும் பள்ளத்தில் விழக் காரணம், ஆனந்தத்தை தக்கவைக்கத் தேவையான சக்தி அவர்களிடத்தில் இல்லை.

Thursday, 6 August 2015

பொன்மொழி


உங்கள் அன்பு, ஆனந்தம், உயிரோட்டம் என்று எதற்கும் அணை போடாதீர்கள். நீங்கள் கொடுப்பதுதான் உங்கள் தன்மையாகிறது, நீங்கள் பிடித்து வைப்பதல்ல.

Wednesday, 5 August 2015

பொன்மொழி

ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதோவொரு தனித்திறமை இருக்கிறது, ஆனால் வேறொருவரைப் போல இருக்கும் முயற்சியில் அதனை அழித்துவிடுகிறார்கள்.

Tuesday, 4 August 2015

பொன்மொழி

உங்கள் சொல், உங்கள் செயல், உங்கள் எண்ணம், உங்களைச் சுற்றியுள்ள உயிரைப் பற்றிய உங்கள் உணர்வு, இவை யாவும் ஒத்திசைவுடன் இருப்பதுதான் நேர்மை.

Friday, 31 July 2015

பொன்மொழி

நீங்கள் மிகவும் உயிரோட்டமுள்ள மனிதராய் ஆகிவிட முடியும். ஆனால், உங்களால் வாழ்க்கையைவிட பெரிதாகிவிட முடியாது. வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை ஆராய்ந்து உணர்ந்திடுங்கள்.

Tuesday, 28 July 2015

பொன்மொழி


உணர்ச்சிகள் தான் உங்கள் வாழ்க்கையை துடிப்புடன் இருக்கச் செய்கிறது. அது கட்டுப்பாடில்லாமல் போகும்போது மட்டுமே பிரச்சனையாகிறது.

Friday, 24 July 2015

பொன்மொழி


இவ்வுலகிற்கு உண்மையான அர்ப்பணிப்பாக இருக்கும் வண்ணம் நம் குழந்தைகளை நாம் வளர்க்க வேண்டும். இனிவரும் தலைமுறை நம்மைவிட சிறந்ததாக இருக்க வேண்டியது அவசியம்.


Monday, 20 July 2015

பொன்மொழி

நீங்கள் தர்க்க அறிவின்படி வாழலாம் அல்லது அற்புதமாய் வாழலாம் - தேர்வு உங்கள் கைகளில்.




Saturday, 18 July 2015

பொன்மொழி

உண்மையுடன் தொடர்பில் இருந்திட, முன்முடிவுகள் செய்யாமல் கவனம்  செலுத்துவதுதான் ஒரே வழி.


Sunday, 12 July 2015

பொன்மொழி

தீமைகளோடு போரிடுங்கள்
அவற்றை வென்றால்
அமைதி தேடி வரும்


Monday, 6 July 2015

சிந்தனை துளி

தவறுகள் செய்வதிலும், அவற்றை ஒப்புக்கொள்வதிலும் திருத்திக் கொள்வதிலும் உங்களுக்கு பிரச்சனை இல்லையென்றால், தவறுகள் நிகழ்வது மிகவும் குறைந்துவிடும்.


Friday, 24 April 2015

பொன் மொழி

பேசாதே ! கேள் ! ஏற்றுக்கொள் !
அதிகம் பேசினால் அமைதியை இழப்பாய் !
ஆணவப் பேசினால் அன்பை இழப்பாய் !
வேகமாய்ப் பேசினால் இனத்தை இழப்பாய் !
கோபமாகப் பேசினால் குணத்தை இழப்பாய் !
வெட்டியாகப் பேசினால் வேலையை இழப்பாய் !
வெகுநேரம் பேசினால் பெயரினை இழப்பாய் !
பெருமையாகப் பேசினால் ஆண்டவனின் அருளை இழப்பாய் !
அன்பாய் பேசினால் அணைவரும் உன் கையில் !


Saturday, 18 April 2015

இல்லறம்

இன்பத்தில் தொலைந்து
துன்பத்தை பகிர்ந்து
இருக்கிளி ஓன்றாய்
திருமணத்தில் சங்கமித்து
இல்லறம் நல்லறமாய்...................!!!!








Wednesday, 25 March 2015

குடும்பம்

தாய்க்கு திகர் ஏதடா
தந்தைக்கு சமம் ஏதடா
உடன்பிறப்புக்கு சரிசமம் ஏதடா
குடும்பத்தை பிரிப்பதும் ஏனடா
பிரிந்தால் வாழ்வதும் ஏனடா
ஆறறிவும் உனக்கு உண்டோடா..............???????


Sunday, 22 March 2015

காதல்

தென்றலாய் வருடும் இசை
மழையாய் காதல் வரிகள்
கண் திறந்து கனவுகாண
மெல்லிசையாய் மனதில் நீ


Saturday, 21 March 2015

வெற்றிக்கனி

தோல்வியை கண்டு
கலையாதே நிலைக்குலையாதே
கூரிய வாளால்
தடைகளை தூளாக்கு
மௌனமாய் முன்னேறு
எட்டாக்கனியும் வெற்றிக்கனியாய்.................!




Monday, 16 March 2015

உனக்காக

கனவெல்லாம் கலைய
நினைவெல்லாம் நீயாக
உலகெல்லாம் உயிரெ
விழியெல்லாம் வழியில்
காத்திருப்பதெல்லாம் கள்ளியே
உனக்காக.........................


Sunday, 15 March 2015

நாடு

வெள்ளையன் பேய்
கொள்ளயன் கையில்
நம் நாடு
மாற்றம் வருமா...........................!


Wednesday, 11 March 2015

வாழ்க்கை

மழலை சிரிப்பு
மறந்து போச்சு
பருவம் பிறக்க
பயித்தியம் ஆச்சு
காதல் கனவு
கரஞ்சு போச்சு
பெண்ணின் வரவு
புண்ணா ஆச்சு
குடும்ப பாரம்
சுமையா போச்சு
மனித வாழ்க்கை
மண்ணா ஆச்சு
மண்ணும் பொன்னும்
நிலைக்காம போச்சு
வந்ததும் போறதும்
புதிர் ஆச்சு..................



Monday, 9 March 2015

காதல்

கயல்விழியே
உன் கருவிழிகள்
பார்ப்பதேதோ நினைப்பதேதோ
என் கருவிழியில்
உன்னை சுமக்கிறேன்


Sunday, 1 March 2015

தென்னங்கன்று

தீயோன் ஒருவனின் தீதால்
வளர்ப்பை குறைகுறும் உலகம்
இழிப்பெயர் சுமப்பவள் தாய்

தென்னங்கன்று இடியூன்று பாதித்தால்
தொங்காய் தந்த தெங்கை
இழிப்பதே இடியை பழிப்பதே!!!


Saturday, 28 February 2015

கவிதை

காலையில் சந்திரன்
மாலையில் சூரியன்
அவள் நினைவில்
வாழ்க்கை மாறியது
மாது பிரிந்தாள்
மதி தெழிந்தது...........


Wednesday, 25 February 2015

அம்மா

மாலை மலர
பூக்கள் அரும்ப
பதமாய் தென்றல்
இதமாய் சாரல்
மறையும் சூரியன்
காப்பியுடன் அம்மாவின்
பாசப் பிணைப்பில்.........!


Tuesday, 24 February 2015

கவிதை

காலை தென்றல்
மாலை மலர்
இரவு சந்திரன்
கனவு உன்னொடு
கலைவது எப்போது........!



Monday, 23 February 2015

காதல்

விழி கண்டு
வழி மறந்தாய்
பூ என்று
பூமி மறந்தாய்
நிலா கண்டு
நிலை மறந்தாய்
மான் என்று
மதி மறந்தாய்
விதி கண்டு
உனை மறந்தாள்


Sunday, 22 February 2015

ஒற்றுமை

சாதி மதத்தை மறந்து
ஒரே குலம் என்றிரு
இந்தியன் என்று ஒன்றுபட்டு
உலகம் நெகிழ நடந்திடு
"ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
இல்லையேல் அனைவரும் தாழ்வு"
என்ற பாரதியின் கனவை நனவாக்கு.